இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!
Sep 04, 2021 85 views Posted By : YarlSri TV
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் இறுதியில் அவரது அமெரிக்கா சுற்றுப்பயணம் இருக்கும் என்று தெரிகிறது.
வருகிற 22-ந்தேதி முதல் 27-ந்தேதிக்குள் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்றும் அங்கு வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 23, 24-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
அப்போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு அங்கு பிரதமர் மோடி முதல் முறையாக செல்ல உள்ளார்.
ஏற்கனவே இரு நாட்டு தலைவர்களும் மூன்று முறை காணொலி காட்சி முலம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
மார்ச் மாதம் நடந்த குவாத் மாநாடு, ஏப்ரலில் நடந்த பருவ நிலை மாற்ற மாநாடு மற்றும் ஜூனில் நடந்த ஜி-8 மாநாட்டில் இருவரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று இருந்தனர்.
இங்கிலாந்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஜோ பைடனும், மோடியும் நேரில் சந்திக்க உள்ளனர். இரு தலைவர்கள் சந்திப்பில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் சீனாவின் செயல்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ள சூழ்நிலையில் ஜோ பைடன்- மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago