மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 வயதுள்ள சிறுவன் பலி!
Aug 29, 2021 169 views Posted By : YarlSri TV
மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 வயதுள்ள சிறுவன் பலி!
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 வயதுள்ள சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று கடுவன பிரதேசம் நோக்கி கற்களை ஏற்றிச்சென்ற பாரஊர்தியொன்றை மேடான பிரதேசத்தில் வைத்து மேற்படி மண் அகழும் இயந்திரம் தள்ளிக்கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் பாரஊர்தியில் ஏற முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்போது, மண்அகழும் இயந்திரத்தின் முன்பக்க சில்லில் சிக்குண்டு சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார்.
பின்னர் சிறுவனை எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தடயம்கந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மண்அகழும் இயந்திர இயக்குநர் பணாமுர காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago