சட்டசபையில் பாட்டு பாடிய ஓ.பன்னீர்செல்வம்!
Aug 28, 2021 127 views Posted By : YarlSri TV
சட்டசபையில் பாட்டு பாடிய ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.
அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவரது மகனை பற்றியும் ஒரு கருத்தை துரைமுருகன் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்தனர். அப்போது துரைமுருகன் எழுந்து, ஓ.பன்னீர்செல்வம் பற்றி நான் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயகர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
அப்போது ஒரு பாடலை ஓ.பன்னீர்செல்வம் பாடினார்.
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இறைவனின் தீர்ப்பு... இடையில் இறைவனின் திரிப்பு... இதுதான் என் நிலைமை... என்று பாடினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago