Skip to main content

யாழ் மருத்துவமனையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சை!

Aug 31, 2021 177 views Posted By : YarlSri TV
Image

யாழ் மருத்துவமனையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சை! 

யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.



யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.



யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பளை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கொவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.



இந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் 129 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 கொவிட்-19 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.



கொவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா மருத்துவமனை சவ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை