புயலால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கு நஷ்டஈடு -
Aug 30, 2021 144 views Posted By : YarlSri TV
புயலால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கு நஷ்டஈடு -
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில், நஷ்டஈடுகளை வழங்குவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், புரெவிப் புயல் காரணமாக தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், நஷ்டஈட்டு தொகையினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் வீசிய புரெவிப் புயலினால் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் பாதிக்கப்பட்டிருந்தன.
குறித்த பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் சுமார் 58 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான நஷ்டஈட்டினை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.
குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, குறித்த நஷ்டஈட்டினை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்குதற்கு அங்கீகாரம் அளித்த நிலையில், அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, புரெவிப் புயலினால் பாதிப்படைந்த வீடுகளை புனரமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உலர் உணவு போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கத்தினால் சுமார் 36 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியுதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைவாக கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago