டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
Aug 16, 2021 117 views Posted By : YarlSri TV
டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கவுசிக் காந்தி (26), ராதாகிருஷ்ணன் (3), சசிதேவ் (12), ஆர். சதீஷ் (11) என ஆட்டமிழந்தனர்.
திருச்சி அணி சார்பில் ராஹில், பொய்யாமொழி தலா 2 விக்கெட்டும், அந்தோனி தாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்பின், 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி 16 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.
நிதிஷ் ராஜகோபால் 26 ரன்னும், சந்தோஷ் ஷிவ் 16 ரன்னும், அந்தோனி தாஸ் 13 ரன்னும், ஆதித்ய கணேஷ் 10 ரன்னும், அட்னன் கான் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சரவணகுமார் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மதிவாணன் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் மதிவாணன் 13 ரன்னில் அவுட்டானார். சரவணகுமார் 45 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், திருச்சி அணி 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
சேப்பாக் அணி சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட், ராஜகோபால் சதீஷ், சாய் கிஷோர், அருண், அலெக்சாண்டர், ஹரிஷ்குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago