மோசடி குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை!
Jan 19, 2021 204 views Posted By : YarlSri TV
மோசடி குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை!
தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக லீ ஜெய்-யோங் உள்ளார். சாம்சங் குழுமத்தின் 3-ஆம் தலைமுறை தலைவரான லீ, அவரது தந்தை லீ குன்-ஹீ மரணத்துக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில், சாம்சுங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை -வின் கூட்டாளியான சோய் சூன்-சில் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஜெய்-யோங் 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீடு செய்ததில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெய்-யோங்க்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
இந்த தீர்ப்பு இப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், சாம்சுங் நிறுவனம் அதன் உச்சபட்ச முடிவெடுப்பாளரை தற்காலிகமாக இழந்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago