முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்தவர் உடலமாக மீட்பு!
Aug 18, 2021 177 views Posted By : YarlSri TV
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்தவர் உடலமாக மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் திடீரென சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வள்ளுவர்புரம் றெட்பானா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய செனவிரத்தின சமரக்கோன் என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர். பரிசோதனைக்காவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago