இலங்கையில் மர்ம மரணங்கள்
Mar 23, 2023 70 views Posted By : YarlSri TV
இலங்கையில் மர்ம மரணங்கள்
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில், 36 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் பின்னவல வனப்பகுதியில் இருந்து நேற்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பின்னவல பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், 2023 மார்ச் 16 ஆம் தேதி காணாமல் போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் தந்தை பின்னவல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (22) மஹா ஓயா, பதியத்தலாவ வீதிக்கு அருகில் உள்ள ஆற்றில் 41 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது.
உயிரிழந்தவர் மஹா ஓயா தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியொன்று மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago