ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 3 பிரித்தானியர்கள் உட்பட 100 பேர் கொத்தாக பலி
Mar 15, 2022 69 views Posted By : YarlSri TV
ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 3 பிரித்தானியர்கள் உட்பட 100 பேர் கொத்தாக பலி
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா முன்னெடுத்த கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலில் 3 பிரித்தானிய முன்னாள் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் cruise ஏவுகணை தாக்குதலில், சம்பவயிடத்திலேயே மூவரும் உடல் சிதறி பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பிரித்தானியர்கள் உட்பட மொத்தம் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மட்டுமின்றி, கொல்லப்பட்ட மூன்று பிரித்தானிய சிறப்பு வீரர்களும், உக்ரைன் போரில் பங்கேற்கவில்லை எனவும், ஆனால் பயிற்சி அளித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து எல்லையில் இருந்து சுமார் 6 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான Yavoriv தளம். சம்பவத்தன்று சுமார் 30 cruise ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது.
மொத்தம் 6 போர் விமானங்களில் இருந்து, அதுவும் ரஷ்ய எல்லையில் இருந்தே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பிரித்தானிய முன்னாள் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறைக்கு தகவல் தெரியவில்லை என கூறப்படுகிறது.
மேலும், கூறப்பட்டதை விட அதிகமானோர் அந்த இடத்தில் கொல்லப்பட்டனர் எனவும் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை, உள்ளூர் நேரப்படி சுமார் 5.45 மணியளவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. வானம் திடீரென்று சிவப்பாக மாறியதாகவும், தாக்குதல் நடந்து பல மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்தவண்ணம் இருந்தது என சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago