Skip to main content

ஜலாலாபாத்தில் பொதுமக்கள் போரோட்டம்: தலிபான்கள் துப்பாக்கிச்சூடு!

Aug 18, 2021 122 views Posted By : YarlSri TV
Image

ஜலாலாபாத்தில் பொதுமக்கள் போரோட்டம்: தலிபான்கள் துப்பாக்கிச்சூடு! 

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாபாத். இந்த நகரத்தை கைப்பற்றிய பின்னர்தான் தலிபான்கள் தலைநகர் காபூலை தங்கள் வசமாக்கினர். தற்போது ஆட்சியமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.



முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் உடன் இணைந்து தலிபான்கள் ஆட்சியமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. தலிபான் அரசியல் அலுவலக உறுப்பினர் இன்று ஹமித் கர்சாய் மற்றும் மூன்று முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



இந்த நிலையில் ஜலாலாபாத்தில் பொதுமக்கள் சிறிய அளவில் கூடி நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு நடத்தப்படும் முதல் துப்பாக்கிச்சூடு இதுவாகும்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை