ரஷ்ய ராணுவ விமானம் நடுவானில் தீப்பிடித்து வெடித்து சிதறியது - 3 பேர் பலி...
Aug 18, 2021 144 views Posted By : YarlSri TV
ரஷ்ய ராணுவ விமானம் நடுவானில் தீப்பிடித்து வெடித்து சிதறியது - 3 பேர் பலி...
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே நேற்று காலை அந்நாட்டு விமான படைக்குச் சொந்தமான ஐஎல்-112 வி ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீ பிடித்தது. தீ பிடித்தபடியே சிறிது தூரத்துக்கு தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள ஒரு வனப்பகுதிக்குள் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் அடுத்த சில நொடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது. இதில் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ விமானம் தீ பிடித்தபடியே வானில் பறந்து பின்னர் வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago