எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!
Aug 11, 2021 160 views Posted By : YarlSri TV
எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!
கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடிய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சோதனைக்கு பின்னர் வேலுமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் கோவை சுகுணாபுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இரும்பு தடுப்புகளை அகற்றி ரகளை செய்ததாக 10 பேர் மீதும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. விடுதியில் நேற்று எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தியபோது, அத்துமீறி உள்ளே நுழைய முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்.பி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட 10 பேர் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago