இறுதி நேரத்தில் இரத்தானது ஜனாதிபதி தலைமையிலான கூட்டம்!
Aug 13, 2021 128 views Posted By : YarlSri TV
இறுதி நேரத்தில் இரத்தானது ஜனாதிபதி தலைமையிலான கூட்டம்!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கட்டுப்பாடு விதிப்பது தினசரி ஊதியம் பெறுபவர்களையும், பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கோவிட் தடுப்பு செயலணியின் சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று காலை 10.30 மணிக்கு திட்டமிடப்பட்ட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அரசாங்க தகவலை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பு பிற்பகலில் நடக்கலாம் என்று கூறப்பட்ட போதும், சில பங்கேற்பாளர்கள் கோவிட் காரணமாக கலந்து கொள்ள முடியாததால் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago