அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
Aug 03, 2021 156 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தார்.
தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்திய அவர் மக்கள் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.
மேலும் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ந் தேதிக்குள் அமெரிக்காவில் தகுதி வாய்ந்தவர்கள் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது.
ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4-ந் தேதிக்குள் அடையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு நேற்று எட்டப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு ஜோ பைடன் நிர்வாகம் தனது இலக்கை அடைந்துள்ளது.
அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தெற்கு, மத்திய மேற்கு இளைஞர்களிடம் தடுப்பூசி செலுத்தும் விகிதங்கள் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டால் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. அங்கு நேற்று புதிதாக 56 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago