திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டும் திமுக தலைமை!
Aug 08, 2021 90 views Posted By : YarlSri TV
திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டும் திமுக தலைமை!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற பாடுபடுங்கள், மக்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தேர்தலுக்காக பாடுபடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில், வரும் 13ம் தேதி மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற உள்ளதாகவும் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் காலையில் திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago