நகர பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்பு
Oct 19, 2023 44 views Posted By : YarlSri TV
நகர பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்பு
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நகரப் பகுதிகளில் சனத்தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சரும் அரசாங்க பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகேவினால் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர் ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2012ல் நகரமயமாக்கல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அப்போது சனத்தொகை 18.2 சதவீதமாக இருந்தது.
பல்பொருள் அங்காடிகள், ஆடை மையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வங்கிகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மற்றும் கிராம சேவையாளர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை, வாடகை அல்லது குத்தகைக்கு உள்ள வீடுகளின் எண்ணிக்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு நகரமயமாக்கல் கணக்கிடப்பட்டது.
இறுதி மாவட்டமாக முல்லைத்தீவு
10 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ளூராட்சி மன்றத்தால் ஆளப்படும் பகுதியில் விவசாயத் துறையைத் தவிர, வேலையில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை இதில் கணக்கிடப்பட்டது.
கணக்கெடுப்பின்படி, கொழும்பு நகர மக்கள் தொகையில் அதிக சதவீதமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இது 96.74 சதவீதமாகும், அதே நேரத்தில் 76.76 சதவீதம் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. மேலும், நகர்ப்புற சனத்தொகையில் 67.28 வீதமானவர்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், நகர சனத்தொகையின் குறைந்தபட்ச வீதமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் 2.84 வீதமாக பதிவாகியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
19 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
19 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
19 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
19 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
19 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
19 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago