Skip to main content

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.!

Jan 06, 2024 38 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.! 

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து பெண் திடீர் மரணமடைந்துள்ளார்.



சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளார்.



உயிரிழந்தவர் எலினா டனல் எனப்படும் 28 வயதான வெளிநாட்டு பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்த பெண் கடந்த மாதம் 31ஆம் திகதி தனது நெர்லாந்து காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.



அவர் நுவரெலியா, கண்டி பயணம் மேற்கொண்டு நேற்று எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இருவரும் அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.



இதன் போது அங்கு திடீரென சுகயீனமடைந்த பெண் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.



சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை