Skip to main content

நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

Apr 01, 2022 65 views Posted By : YarlSri TV
Image

நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள்: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு, உதவிகளை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம், தமிழக மாநில அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.



இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, (Narendra Modi) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) டெல்லியில் நேற்று வியாழக்கிழமை (31-03-2022) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.



பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிர் காக்கும் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் அனுமதி வழங்குமாறு, மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.



மேலும், இலங்கை − இந்திய மீனவ பிரச்சினைக்கான தீர்வு மற்றும் கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பிலும் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமரிடம் கோரியுள்ளார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை