யாஷிகா அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்…சோகத்தில் ரசிகர்கள்!
Jul 26, 2021 117 views Posted By : YarlSri TV
யாஷிகா அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்…சோகத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் பிரபலம் யாஷிகா கடந்த சனிக்கிழமை இரவு மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த பவானி யாஷிகா உடன் கடந்த சனிக்கிழமை பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது.
தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்நிலையில் யாஷிகாவிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில் யாஷிகா காரை ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் பொலிசார் விசாரணையில் கூறப்படுகிறது.
அதிவேகமாக காரை ஓட்டி வந்த யாஷிகா கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளார். யாஷிகா கார் ஓட்டி வந்த போது அவரது தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் அவர் விபத்து ஏற்பட்டபோது காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதாக அவர் வாக்குமூலம் தந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago