Skip to main content

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – கரு ஜெயசூரிய

Jul 15, 2021 193 views Posted By : YarlSri TV
Image

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – கரு ஜெயசூரிய 

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.



முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,



கொவிட் – 19 வைரஸின் நிலைமாற்றமடைந்த புதிய திரிபுகளின் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டிற்குள் அடையாளங்காணப்படக்கூடும்.



எனவே எமது நாட்டுமக்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில், அரசாங்கமானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட காலவரையறைக்குள் பொதுமக்களுக்கான தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியது அவசியமாகும்.



இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை