ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்!
Jul 03, 2021 127 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்!
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது 2001-ம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டப்பட்டனர்.
ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதையடுத்து நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோபைடன் கூறும்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிக்குள் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்தார்.
இப்பணி முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இந்த விமானப்படை தளம் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகளுக்குபிறகு அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ளன. இதனால் சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜன்சாகி கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நேட்டோ படையினர் வெளியேறினர். அமெரிக்க படைகள் முழுமையாக ஆகஸ்டு மாத இறுதியில் வெளியேறும் என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago