விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், பெடரர், ஆஷ்லி பார்ட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்
Jul 06, 2021 143 views Posted By : YarlSri TV
விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், பெடரர், ஆஷ்லி பார்ட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோ–விச் (செர்பியா), 20-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் காரினை (சிலி) சந்தித்தார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றியை ருசித்து காலிறுதிக்குள் கால் பதித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிராஜ்சிகோவாவை (செக் குடியரசு) வெளியேற்றி முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா, துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிர் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி கண்டனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago