மியாமி கட்டிட விபத்தில் 4 பேர் பலி - இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் கதி என்ன?
Jun 26, 2021 172 views Posted By : YarlSri TV
மியாமி கட்டிட விபத்தில் 4 பேர் பலி - இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் கதி என்ன?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர். 1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, இந்தக் கட்டிடம் நேற்று அதிகாலை 1 மணியளவில் சீட்டுக்கட்டு போல் திடீரென சரிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்தது.
இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மியாமி குடியிருப்பு கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை என மியாமி-டேட் பகுதி மேயர் டேனியல்லா லெவின் காவா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் மற்றும் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.
1981-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1990-களில் இருந்து ஆபத்தான கட்டிடமாக உள்ளது என 2020-ம் ஆண்டில் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பேராசிரியரான ஷிமோன் வோடோவின்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராகுவே ஜனாதியின் உறவினர்கள் உள்பட பராகுவேவை சேர்ந்த 51 பேரை காணவில்லை என பராகுவே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி
உள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
10 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
10 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
10 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
10 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
10 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
10 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago