ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!
Jun 22, 2021 131 views Posted By : YarlSri TV
ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ரஷிய அதிபர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது அவர் அலெக்சி நவால்னி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை இணக்கமாக நடைபெற்றதாக புதின் தெரிவித்தார்.இந்த நிலையில் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘அலெக்சி நவால்னி வழக்கில் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம். நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும். அதைசெய்யும்போது ரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’’ என கூறினார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago