Skip to main content

கென்யா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து - 17 ராணுவ வீரர்கள் பலி

Jun 25, 2021 189 views Posted By : YarlSri TV
Image

கென்யா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து - 17 ராணுவ வீரர்கள் பலி 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகாப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில் காலை சுமார் 8 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது.



அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 17 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.



இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி குறித்து உடனடியாக தெரியவரவில்லை.



விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டர் ‘மில் மி-17’ ரகத்தை சேர்ந்தது என தகவல்கள் கூறுகின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை