பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு லைக் செய்த விவகாரம் - மன்னிப்பு கேட்டார் நடிகை பார்வதி!
Jun 16, 2021 165 views Posted By : YarlSri TV
பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு லைக் செய்த விவகாரம் - மன்னிப்பு கேட்டார் நடிகை பார்வதி!
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். முதலில் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டங்கள் எழுந்தன.
இந்த நிலையில் வேடன் பதிவை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி முதலில் ‘லைக்' செய்திருந்தார். பின்னர், பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும் டிஸ்லைக் செய்துவிட்டார்.
இதுகுறித்து நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளதாவது: “வேடன் மீது குற்றம்சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன். வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது 'லைக்'கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago