எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கவில்லை: அஸ்வத் நாராயண்!
Jun 18, 2021 157 views Posted By : YarlSri TV
எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கவில்லை: அஸ்வத் நாராயண்!
கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜனநாயகத்தில் விவாதங்கள், ஆலோசனைகள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு நடைபெறும் ஆலோசனைகளில் தவறு இல்லை. ஆட்சி நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்துவது, கட்சியை மேலும் பலப்படுத்துவது, கட்சி தொண்டர்களின் கருத்துகளை சேகரிப்பது, மக்களிடம் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற்று உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கவில்லை. வளர்ச்சி பணிகள், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். மந்திரிகள் சி.பி.யோகேஷ்வர், ஈசுவரப்பா ஆகியோரின் கருத்துகள் குறித்து நான் எதுவும் கூற மாட்டேன். அதுபற்றி அவர்களிடமே நீங்கள் கேளுங்கள்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் நாங்கள் வாக்கு சேகரிப்போம். எங்கள் கட்சி பலம் வாய்ந்தது. எங்கள் கட்சி பயணிக்கும் திசை குறித்து கட்சி மேலிடமே முடிவு செய்யும். கட்சியில் குழப்பங்கள் இருந்தால் அதை கட்சி மேலிடம் சரிசெய்யும். இந்த விஷயத்தில் அதிக விளக்கம் தேவை என்றால் நீங்கள் எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரிடம் கேளுங்கள்.
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆட்சி நிர்வாகம் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. அவரது மந்திரிசபையில் நானும் உள்ளேன். மந்திரிசபை புனரமைப்பு குறித்து நான் ஏதாவது கருத்து கூறினால் அதனால் குழப்பம் ஏற்படும். அதனால் அதுபற்றி பேச விரும்பவில்லை. ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நான் இருக்கிறேன். நாளை வேறு யாராவது நியமிக்கப்படலாம்.
பதவிக்கு போட்டி இருக்க வேண்டும், ஆசை இருக்க வேண்டும். ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருப்பதால் நான் அடிக்கடி ராமநகருக்கு வருகிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் மாகடி தொகுதியில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நான் ராமநகர் மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். மல்லேஸ்வரம் தொகுதியில் நான் பாதுகாப்பாக உள்ளேன். தொகுதி மாறும் எண்ணம் எனக்கு இல்லை.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago