Skip to main content

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது!

Jun 12, 2021 186 views Posted By : YarlSri TV
Image

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது! 

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.



கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது.



சம்பவம் தொடர்பில் கொடிக்காம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமையை கண்டறிந்தனர்.



அதன் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலினை பெற்று டிப்பர் வாகனத்தை தேடி வந்திருந்தனர்.



இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனம் நேற்று மாலை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த போது கொடிகாம காவல்துறையினரால் வாகனம் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட சாரதியை கொடிகாம காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை