பாரம் தாங்காமல் நைஜர் நதியில் கவிழ்ந்த படகு... 156 பேரை காணவில்லை!
May 27, 2021 153 views Posted By : YarlSri TV
பாரம் தாங்காமல் நைஜர் நதியில் கவிழ்ந்த படகு... 156 பேரை காணவில்லை!
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில் புறப்பட்டனர். நைஜர் ஆற்றில் சென்ற அந்த படகு, புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 20 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 156 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுபற்றி தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளர் யூசுப் பிர்மா கூறும்பொழுது, ‘படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளனர். பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர். பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி நாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை. படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் ஏற்றப்பட்டு உள்ளன. நாங்கள் இன்னும் மீட்பு பணியை தொடர்ந்து வருகிறோம். காணாமல் போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம்’ என கூறியுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கடைகளில் நெருக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை
-
அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 30 நாளில் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago