பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 30 நாளில் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது!
Oct 09, 2020 286 views Posted By : YarlSri TV
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 30 நாளில் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 70) 2 ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லண்டனுக்கு சென்றவர் நாடு திரும்பவில்லை.
அவர் தனக்கு ஊழல் வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு 8 வாரங்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழக்குகள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நீதிபதிகள் அமீர் பரூக், மோசின் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் அவருக்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். இதை 2 நாளிதழ்களில் வெளியிடவும் உத்தரவிட்டனர்.
இதன்படி அவர் 30 நாளில் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகும் அவர் கோர்ட்டில் சரண் அடையாவிட்டால், அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார், அவரது சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago