வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
May 22, 2021 208 views Posted By : YarlSri TV
வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்று போட்டுக்கொள்ளலாம்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இருக்கிறது. தொற்று அதிகமாகி வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
இதனால் தடுப்பூசி போட காத்திருக்க வேண்டி உள்ளது. இந்தநிலையில் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்து சிலருக்கு ஊசி போடுவதை பார்வையிட்டார்.
மாநகராட்சி மருத்துவ ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவார்கள். இந்த திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago