இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு!
May 11, 2021 163 views Posted By : YarlSri TV
இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.
இதற்கமைய நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பயணிகளுக்கே நாட்டுக்குள் நுழைவதற்கு மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நாடுகளிலுள்ள பயணிகள் குவைத்துக்குள் நுழைய வேண்டுமாயின் பிறிதொரு நாட்டில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்க வேண்டியது அவசியம் எனவும் குவைத் அமைச்சரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பொருட்கள் விமான சேவைகளுக்கு குறித்த தீர்மானம் பொருந்தாது என குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago