Skip to main content

கொரோனா பாதிப்பு எதிரொலி - ஏப்ரல் 30 வரை அனைத்து பள்ளிகளையும் மூட இலங்கை அரசு முடிவு!

Apr 28, 2021 207 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பாதிப்பு எதிரொலி - ஏப்ரல் 30 வரை அனைத்து பள்ளிகளையும் மூட இலங்கை அரசு முடிவு! 

இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் என்ற அளவில் உள்ளது. அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 647 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்த நிலையில் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என முதலில் முடிவானது. எனினும், இந்த இரு மாகாணங்களை தவிர்த்து பிற மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்தது.



இந்நிலையில், பல்வேறு கல்வி மண்டலங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என கல்வி அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.



இதுதொடர்பாக, அந்நாட்டு அமைச்சரவையின் ஊடக செய்தி தொடர்பு அதிகாரி கெஹெலியா ராம்புக்வெல்லா கூறுகையில், கொரோனா பாதிப்பு உயர்வால் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் டியூசன் வகுப்புகளை வரும் 30-ம் தேதி வரை மூடுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை