யாழ்ப்பாணத்தில் தாதியர் உள்ளிட்ட 13பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
Apr 27, 2021 229 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணத்தில் தாதியர் உள்ளிட்ட 13பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த பரிசோதனை முடிவுகளிலேயே 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி இருவருக்கும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில், சிகிச்சை பெற்ற மூவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago