Skip to main content

கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

May 01, 2021 159 views Posted By : YarlSri TV
Image

கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்! 

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.



அதுமட்டுமின்றி பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தொடக்கத்தில் மக்கள் சரிவர கடைபிடித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எங்கு பார்த்தாலும் திருவிழா போல் பொதுமக்கள் கூட்டம் உள்ளது.



மார்க்கெட், நேருவீதி, காந்தி வீதி, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதால் எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



ஏற்கனவே நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பி வருகிறது. இதை பார்த்தாவது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

14 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை