இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!
Apr 01, 2021 203 views Posted By : YarlSri TV
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!
வவுனியாவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவர் பிரிவின் கிராம அலுவலர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிராம அலுவலரை மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்ல இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், குறித்த கிராம அலுவலர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைதையடுத்து குறித்த கிராம அலுவலரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஒப்படைந்திருந்தனர்.
இதனையடுத்து இன்று (31.03) மாலை குறித்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும், வவுனியா பொலிசாரும் முன்னெடுத்துள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வலுவிழந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவையென வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்தின் உபதலைவர் வைத்தியர்க.நந்தகுமார் தெரிவித்தார்!
-
மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி
-
மதுரையில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago