ராமேஸ்வரம் கோயிலில் எதிரிகளின் கோபம் தணிக்க சசிகலா சிறப்பு பூஜை!
Mar 30, 2021 217 views Posted By : YarlSri TV
ராமேஸ்வரம் கோயிலில் எதிரிகளின் கோபம் தணிக்க சசிகலா சிறப்பு பூஜை!
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தனியார் விடுதியில் தங்கினார். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலுக்கு கட்சி பிரமுகர்கள் 200 பேருடன் வந்தார். அங்கு சுவாமி சன்னதி அருகிலுள்ள விஸ்வநாத சன்னதி முன்பு கங்கை நீர் அடங்கிய புனித நீர் கலசம் வைத்து நடத்தப்பட்ட கும்ப பூஜையில் பங்கேற்றார். 30 புரோகிதர்கள் வேதபாராயணம் முழங்க, நடந்த ருத்ரபாராயண ஜபம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்ற சசிகலா புனிதநீர் அடங்கிய கலசத்துடன் ராமநாதசுவாமி சன்னதிக்கு சென்றார்.
அங்கு சுவாமி தரிசனம் செய்தவர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபட்டார். காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறினார். ருத்ரபாராயண ஜப பூஜையில் பங்கேற்ற புரோகிதர்களிடம் கேட்டபோது, ‘‘எதிரிகளின் கோபத்தை தணித்து அவர்களை சாந்தமடைய செய்வதற்காக நடத்தப்படும் பூஜையே ருத்ரபாராயண ஜப பூஜை’’ என்றனர். கோவில்பட்டியில்: கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் சமேத பூவனநாத சுவாமி கோயிலுக்கு சசிகலா நேற்று காலை காரில் சென்று தரிசனம் செய்தார். பின்னர் பூவனநாத சுவாமி சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் அரை மணி நேரத்துக்குப்பின் வெளியே வந்து காரில் மதுரை புறப்பட்டு சென்றார். அவருடன் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
14 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
14 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
14 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
14 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
14 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
14 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago