லியோனி பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட திமுக வேட்பாளர்!
Mar 27, 2021 242 views Posted By : YarlSri TV
லியோனி பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட திமுக வேட்பாளர்!
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி , “நாட்டு மாடு பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதி போய்விட்டார்கள். ஒரு காலத்துல பெண்களுடைய இடுப்பு எட்டு மாதிரி இருக்கும் பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்து உட்கார்ந்து கொள்ளும் . ஆனால் நாட்டு மாடு குடித்து பெண்கள் இடுப்பு என்று பேரல் மாதிரி ஆகிவிட்டது. பிள்ளை இடுப்புல இருந்து வழுக்கிட்டு போகுது” என்றார். திண்டுக்கல் ஐ லியோனின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திண்டுக்கல் ஐ.லியோனி மீது, பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அத்துடன் ஐ.லியோனி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவரது பதிவில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்” என்று தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.
இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, “பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மாட்டு பால் நல்லது என்று கூறி இருக்கலாம் அதை விடுத்து அந்த உதாரணம் தேவையற்றது” என்றார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago