Skip to main content

15-ந்தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி!

Mar 12, 2021 179 views Posted By : YarlSri TV
Image

15-ந்தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி! 

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.



இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.



நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.



இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந்தேதி அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.



மேலும், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் வருகிற 15-ந்தேதி அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை