ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை விளக்கமற்றது - ரணில் விக்கிரமசிங்க
Mar 09, 2021 204 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை விளக்கமற்றது - ரணில் விக்கிரமசிங்க
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை விளக்கமற்றது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் பிரதான குற்றவாளிகள் யார் என்ற உண்மைகளை ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்கத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தனது நிலைப்பாட்டிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் யார்? அவருடன் நேரடியாகத் தொடர்புபட்ட நபர்கள் யார்? ஐ.எஸ். அமைப்புடன் எவ்வாறு இவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தினர்? இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன? போன்ற விடயங்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் வெளிவரும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், அந்த விசாரணை அறிக்கையில் அவ்வாறான தகவல்கள் எதுவும் இல்லை.
சம்பவத்துக்கு முன்னரே கிடைத்ததாகக் கூறப்படும் இந்தியப் புலனாய்வுத் தகவலை எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் தாக்குதலைத் தடுத்திருப்பேன்.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் நான் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டதனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டு ஒன்பது மணித்தியாலங்களுக்குள் தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலரையும் கைதுசெய்யவும், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடிந்தது.
இவ்வாறு துரிதமாகச் செயற்பட்டமை குறித்து வெளிநாடுகள் கூட ஆச்சரியப்பட்டன” – என்றார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்!
-
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மரியாதை!
-
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர். கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமி காவியும் உள்ளனர். ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago