Skip to main content

கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது!

Mar 07, 2021 185 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது! 

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.



கறுப்பு ஞாயிறு குறித்த தெளிவுப்படுத்தல்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.



இதற்கமைய, இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு ஆடை அணிந்து ஞாயிறு ஆராதனைகளில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கறுப்பு ஞாயிறானது ஒரு நாள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.



ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படும் என இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்த போதிலும் அது இதுவரை நிகழவில்லை.



எனவே அமைதியான முறையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை