177 கோடி ரேசன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது!
Feb 20, 2021 208 views Posted By : YarlSri TV
177 கோடி ரேசன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது!
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற கும்பலை போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர். மேலும் அவா்கள் மீது மராட்டிய திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு ரேசன் பொருட்கள் கடத்தலில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கும்பல் பொது வினியோக திட்டம், அங்கன்வாடி போன்ற திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இவ்வாறு ரூ.177 கோடி மதிப்பிலான ரேசன் பொருட்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் ரேசன் பொருள் விற்பனை மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சம்பத் நாம்தேவ், அருண் நாம்தேவ், விஷ்வாஸ் நாம்தேவ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சிறப்பு கோர்ட்டு 3 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago