தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விசேட பேச்சுவார்த்தை இன்று!
Feb 08, 2021 206 views Posted By : YarlSri TV
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விசேட பேச்சுவார்த்தை இன்று!
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய சிக்கல்கள் தொடர்பில் இன்று மாலை அமைச்சர் நிவாட் கப்ரால் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளுக்கான தவணை கட்டணத்திற்கான வட்டியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளையதினம் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டிருந்தன.
எவ்வாறாயினும் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago