Skip to main content

சிலியில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

Feb 06, 2021 267 views Posted By : YarlSri TV
Image

சிலியில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்! 

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.



அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்து ஆயிரத்து 315பேர் குணமடைந்துள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் சிலியில், இதுவரை ஏழு இலட்சத்து 44ஆயிரத்து 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18ஆயிரத்து 808பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால். மூவாயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டதோடு 77பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆயிரத்து 896பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 487பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை