இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட வேண்டும்: இந்தியப் பிரதமர்!
Feb 04, 2021 319 views Posted By : YarlSri TV
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட வேண்டும்: இந்தியப் பிரதமர்!
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த உறவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா நோய்க்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago