வவுனியாவில் செயின் அறுப்பு சந்தேக நபர்கள் மூவர் கைக்குண்டுடன் கைது.!
Jan 31, 2021 218 views Posted By : YarlSri TV
வவுனியாவில் செயின் அறுப்பு சந்தேக நபர்கள் மூவர் கைக்குண்டுடன் கைது.!
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த செயின்களை அறுத்துச்சென்றிருந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர். குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி மற்றும் கொழும்பு பகுதியை சேர்ந்த மூன்று நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 9 பவுண் தங்க நகைகள் மற்றும் கைக்குண்டு, வாகன இலக்கத்தகடுகள், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் அழகியவண்ணவின் வழிகாட்டலில் சாயன்களான திசாநாயக்க, விக்கிரமசூரிய, குமணசேகர, சதுரங்க, கான்ஸ்டபிள்களான தயாளன், ரணசிங்க, தம்மிக, சமீர, மொறவக்க, அமரசூரிய ஆகியோர்களை கொண்ட காவற்துறை குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago