Skip to main content

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது!

Sep 16, 2020 218 views Posted By : YarlSri TV
Image

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது! 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.



கொரோனா அச்சம் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில்செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் மறைந்த எம்எல்ஏ-க்களுக்கு இரங்கல் தீர்மானம் நடைபெற்ற நிலையில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.



பின்னர் கேள்வி நேரத்துடன் தொடங்கப்பட்ட கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த நிலையில் நீட் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.



அப்போது நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது.மூன்றாம் நாளான இன்று துணை முதல்வரால் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை