போரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Jan 28, 2021 207 views Posted By : YarlSri TV
போரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் டெங்கு நோயின் தாக்கமும் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த வதனமார் பூஜை செய்யும் ஆலயமாக கருதப்படும் கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (புதன்கிழமை) சிரமதான நடவடிக்கைகள் மூலம் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆத்துவாளைகளும் புற்களும் முட்களும் பரந்து காணப்படுகின்ற காரணத்தினால் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் பிரதேசசபை செயலாளர் பா. சதீஸ்கரனின் வழி நடத்தலின் கீழ் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சிரமதானத்தில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி,கல்லடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினர் பங்குகொண்டிருந்தனர்.
இன்று இவ்வாலயத்தில், தைப்பூசம் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் வதனமார்களால் மிகவும் சிறப்பான முறையில் பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
வயலில் வேளாண்மை வெட்டி முதல் புதூர் பொங்கள் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடைகள் வளர்க்கும் பண்ணையாளர்கள் முதல் பால் கறந்து பொங்கள் வழிபாடுகள் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago