இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
Jan 25, 2021 273 views Posted By : YarlSri TV
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
அந்தவகையில் தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கடந்த 16ஆம் திகதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதேவேளை பிரேசில், வங்காள தேசம், பக்ரைன், பூட்டான், மாலைத்தீவு, மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், சிசெல்லஸ், இலங்கை ஆகிய 13 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்கின்றது.
அதில் மாலைத்தீவு, பூட்டான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இலவசமாகவும் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவி செய்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கி உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவுவதாலும் தகவல்களை பரிமாறிக் கொள்வதாலும்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago